பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தரால் துஷ்பிரயோகம். #இலங்கை


12 வயது சிறுவன் ஒருவன் பொலிஸ் காவலில் இருந்த சந்தர்ப்பத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு
உள்ளான சம்பவம் ஒன்று வெலிஓய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கடமையில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தரால் குறித்த சிறுவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை வைத்திய பரிசசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி கூரைத்தகடுகளை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன், பதவிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.

குற்றவாளியான குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், இந்த சம்பவம் தொடர்பில் வெளியில் தெரிவித்தால் "துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிடுவேன்" என பாதிக்கப்பட்ட சிறுவனை அச்சுறுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வட மத்திய மாகாண சிறுவர் இல்லத்தில் குறித்த சிறுவனை சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கெப்பதிக்கொல்லாவ மாவட்ட நீதிமன்ற நீதிபதி மனோஜ் பிரபாகரன், இந்த துஷ்பிரயோக சம்பவத்தால் குறித்த சிறுவன் கடுமையான வலியை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தரால் துஷ்பிரயோகம். #இலங்கை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தரால் துஷ்பிரயோகம். #இலங்கை Reviewed by Madawala News on May 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.