அமித் வீரசிங்கவை சிறைச்சாலைக்குள் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
அவரது நெருங்கிய சகாக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
திகன கலவரத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு அனுராதபுர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
மஹோசன் பலகாய அமித் வீரசிங்க வைத்தியசாலையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பௌத்த பிக்கு ஒருவர் தகவல் வெளியிட்டிருந்தார்.
சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் அமித் வீரசிங்க தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த தேரர் குறிப்பிட்டுள்ள அதேவேளை அமித் வீரசிங்க பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலையில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிகையில் அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை கடுமையாக தாக்கியுள்ளதாகவும் அதனை தொடர்ந்து அவரை சிகிற்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அமித்தின் நெருங்கிய சகாக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமித் வீரசிங்கவை சிறைச்சாலைக்குள் கொலை செய்ய முயற்சியாம் !!
Reviewed by Madawala News
on
May 26, 2018
Rating: