மடவளையில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்பு.


கண்டி - மடவளை பஸார் தெல்தெனிய வீதி  (ஹுதா பாடசாலைக்கு - முன்னர் நிக்காஹ் ஹோல்) அருகாமையால்
செல்லும் பாதையில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்  ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார் .

ஜனாப் ஷாமில் அவர்களின் மனைவி பாத்திமா ஷிபானி ( சுமார் 38 வயது) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை பகல் வேளையில் பாடசாலை சென்ற இரு பிள்ளைகள் திரும்பி வந்த போது தாயாரை இந்த நிலையில் கண்டவுடன்  வேலைக்கு சென்றிருந்த தந்தைக்கு அழைப்பெடுத்து தெரிவித்துள்ளனர்.

யக்கஹபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் சில வருடங்களாக மடவளையில் வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகள் சுமார்  15, 14 வயதுடையவர்கள்.

  தற்போது போலீசார் , தடவியல் நிபுணர்கள் மற்றும் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் ஸ்தலத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மடவளையில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்பு. மடவளையில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்  ஜனாஸாவாக மீட்பு. Reviewed by Madawala News on April 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.