நான் பேசினால் சில‌ கிறுக்குக‌ளுக்கு எகிறிக்கொண்டு வ‌ரும். ஆனால் நான் ய‌தார்த்தைத்தையும் உண்மையையுமே பேசுகிறேன்.


நான் பேசினால் சில‌ கிறுக்குக‌ளுக்கு எகிறிக்கொண்டு வ‌ரும். ஆனால் நான் ய‌தார்த்தைத்தையும்
உண்மையையுமே பேசுகிறேன் என்ப‌தை கால‌ம் நிரூபித்துக்கொண்டிருக்கிற‌து.

முஸ்லிம் ச‌மூக‌ம் இப்போது மாகாண‌ ச‌பை தொகுதி முறை ப‌ற்றி முணுமுணுக்க‌ ஆர‌ம்பித்துள்ள‌து. பொல்லைக்கொடுத்து தொட‌ர்ந்தும் அடி வாங்கிக்கொண்டிருக்கிற‌து. ஐ தே க‌ அர‌சின் துரோக‌த்த‌ன‌ங்க‌ளை புரிந்தும் புரியாத‌து போல் ந‌டிக்கிற‌து.

தேர்த‌ல் திருத்த‌ யோச‌னைக‌ள் என்ப‌ன ம‌ஹிந்த‌ அர‌சாங்க‌த்திலேயே ஹெல‌ உறும‌ய‌வினால் வித‌ந்துரைக்க‌ப்ப‌ட்ட‌து. 2006க‌ளிலேயே இது ப‌ற்றி ஹெல‌ உறும‌ய‌ ம‌ஹிந்த‌ அர‌சுக்கு அழுத்த‌ம் கொடுத்த‌து. ஆனாலும் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ இத‌னை ந‌டை முறைப்ப‌டுத்த‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்காம‌ல் இழுத்த‌டித்தார்.
இத்தேர்த‌ல் முறை சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு பாத‌க‌மான‌து என்ப‌தை உல‌மா க‌ட்சி அவ்வ‌ப்போது ம‌ஹிந்த‌விட‌ம் எத்தி வைத்த‌து. சிறுபான்மை ம‌க்க‌ளின் குறிப்பாக‌ முஸ்லிம்க‌ளின் க‌ருத்துக்க‌ளை ஓர‌ள‌வு ம‌திக்க‌க்கூடிய‌ ஜ‌னாதிப‌தியாக‌ ம‌ஹிந்த‌ இருந்தார்.

முஸ்லிம்க‌ள் த‌ன‌க்கு புரியாணி த‌ருவார்க‌ள் ஆனால் ஓட்டு போட‌மாட்டார்க‌ள் என‌ ம‌ஹிந்த‌வுக்கு ம‌ன‌வ‌ருத்த‌ம் இருந்தாலும் முஸ்லிம் ச‌மூக‌த்தை ம‌தித்தார். இத‌ன் எதிரொலியே தேர்த‌ல் திருத்த‌ விட‌ய‌ங்க‌ளை க‌ண‌க்கில் எடுக்காமையாகும்.

ஆனால் ஐ தே க‌ த‌லைமையிலான‌ இந்த‌ அர‌சு ஆட்சிக்கு வ‌ந்த‌திலிருந்து முஸ்லிம்க‌ளின் ஒவ்வொரு உரிமையையும் இல்லாதொழிக்கிற‌து.

இப்போது மாகாண‌ ச‌பை தொகுதி மூல‌ம் முஸ்லிம் பிர‌திநிதித்துவ‌த்தை குறைத்து விட்டு அது வெற்றிய‌ளிக்கும் ப‌ட்ச‌த்தில் பாராளும‌ன்ற‌த்தேர்த‌லிலும் இந்ந‌டை முறையை பின் ப‌ற்றும். என

நாட்டில் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ பிர‌ச்சினைக‌ள் இருக்கும் போது அவ‌ற்றை நீக்க‌ முய‌ற்சி எடுக்காம‌ல் ஐ தே க‌ அர‌சு முஸ்லிம்க‌ளின் உரிமைக‌ளில் கை வைப்ப‌திலேயே முணைப்பு காட்டுகிற‌து.

ஆக‌வே முஸ்லிம் ச‌மூக‌ம் விழிப்ப‌டைய‌ வேண்டும். குறிப்பாக‌ கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் இது விட‌ய‌த்தில் திற‌ந்த‌ க‌லந்துரையாட‌ல்க‌ளை உட‌ன‌டியாக‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சி.

கால‌மும் இதனை  நிரூபித்துக்கொண்டிருக்கிற‌து.

நான் பேசினால் சில‌ கிறுக்குக‌ளுக்கு எகிறிக்கொண்டு வ‌ரும். ஆனால் நான் ய‌தார்த்தைத்தையும் உண்மையையுமே பேசுகிறேன். நான் பேசினால் சில‌ கிறுக்குக‌ளுக்கு எகிறிக்கொண்டு வ‌ரும். ஆனால் நான் ய‌தார்த்தைத்தையும் உண்மையையுமே பேசுகிறேன். Reviewed by Madawala News on March 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.