தடை செய்யப்பட்ட பகுதியால் ஓடிவந்து அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரும் ஸ்ரீ லங்கன் விமானத்தில் ஏற முயன்ற நபர் கைது.



அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பாதுகாப்பு உத்தரவை மீறி ஓடுபாதைக்கு அருகில் ஓடி விமானத்தில் ஏற முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிடைத்த அழைப்பிற்கமைய, அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபர், பாதுகாப்பு பகுதியினூடாக ஓடிச்சென்று தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை வரும் விமானத்தின் சரக்கு பெட்டிக்குள் அவர் நுழைய முயன்றதாகவும், பொருட்களை கையாளுபவர்கள் தலையிட்டு சந்தேக நபரை பொலிஸ் அதிகாரிகளின் காவலில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் மீது வேறு எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை எனவும் அடுத்த 12 மாதங்களுக்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதியால் ஓடிவந்து அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரும் ஸ்ரீ லங்கன் விமானத்தில் ஏற முயன்ற நபர் கைது. தடை செய்யப்பட்ட பகுதியால் ஓடிவந்து அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரும் ஸ்ரீ லங்கன் விமானத்தில் ஏற முயன்ற நபர் கைது. Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.