இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.



யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (15) அதிகாலை 12.30க்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகராறில் பட்டா ரக வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.


புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்நிலையில் இது குறித்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.