புதுவருட கொண்டாட்ட தினத்தில் முன்னாள் காதலனின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த யுவதி சிகிச்சைகள் பலனின்றி இன்று உயிரிழப்பு.



துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யுவதி உயிரிழப்பு
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யுவதி உயிரிழப்பு

மின்னேரிய கிரித்தலே பகுதியில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற புதுவருட கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கிரித்தலை பகுதியைச் சேர்ந்த ஜே.ஐ.கோசலா சாமோத்ய பண்டார என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.


கடந்த 14ஆம் திகதி இந்த யுவதி தனது வீட்டுக்குப் பக்கத்து வீடொன்றில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சிறுமியின் முன்னாள் காதலனே துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

அதேநேரம், பிரதேசவாசிகள் அவரை ஹிகுராக்கொட வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.


பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் அங்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


அண்மையில், பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

புதுவருட கொண்டாட்ட தினத்தில் முன்னாள் காதலனின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த யுவதி சிகிச்சைகள் பலனின்றி இன்று உயிரிழப்பு. புதுவருட கொண்டாட்ட தினத்தில் முன்னாள் காதலனின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த யுவதி சிகிச்சைகள் பலனின்றி இன்று உயிரிழப்பு. Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.