கணிசமான முதலீடுகள் நாட்டிற்குள் மிக அசுர வேகத்துடன் வந்து கொண்டிருக்கின்றன ; இராஜாங்க அமைச்சர் திலும்



இந்த ஆண்டு 4 முதல் 4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான இலக்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், நாடு 1.8 பில்லியன் டொலர் முதலீடுகளைப் பெற முடிந்தது என்றும் அவர் கூறினார்.

கண்டியில் செவ்வாய்க்கிழமை (16) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், முதலீடுகள் கணிசமான அளவில் நாட்டிற்குள் மிக அசுர வேகத்துடன் வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த போராட்டத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளால், கடந்த ஆண்டு முதல் பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் வரவில்லை எனவும் ஆனால், பிற்பகுதியில், எதிர்பார்த்த அளவை விட முதலீடுகள் நாட்டிற்குள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு 4.5 பில்லியன் டொலர் முதலீட்டு இலக்கை நெருங்க வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் அமுனுகம மேலும் தெரிவித்தார்.
கணிசமான முதலீடுகள் நாட்டிற்குள் மிக அசுர வேகத்துடன் வந்து கொண்டிருக்கின்றன ; இராஜாங்க அமைச்சர் திலும் கணிசமான முதலீடுகள் நாட்டிற்குள் மிக அசுர வேகத்துடன் வந்து கொண்டிருக்கின்றன ; இராஜாங்க அமைச்சர் திலும் Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.