பாராளுமன்ற உறுப்பினர்கள் விளையாடும் பார்லிமெண்ட் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டி இன்று நடைபெறுகிறது.



நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன், பார்லிமெண்ட் பிரீமியர் லீக் தொடர் பெலவத்த புத்ததாஸ விளையாட்டரங்கில் இன்று இடம்பெறவுள்ளது.


இந்த தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக நாடாளுமன்ற பணிக்குழாமினரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதியும், இரண்டாம் திகதியும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதற்கமைய, எதிர்வரும் முதலாம் திகதி ஆயுர்வேத சட்டத்தின் கீழான கட்டளைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.


அதேநேரம், இரண்டாம் திகதி பரேட் திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும், கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டம் தொடர்பான விவாதமும் இடம்பெறவுள்ளன


பாராளுமன்ற உறுப்பினர்கள் விளையாடும் பார்லிமெண்ட் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டி இன்று நடைபெறுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் விளையாடும் பார்லிமெண்ட் பிரீமியர்  லீக் கிரிக்கட் போட்டி இன்று நடைபெறுகிறது. Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.