BTS இசைக்குழு மீதான ஆர்வத்தால் கொரியா செல்லும் முயற்சியில் ஈடுப்பட்டு காணாமல் போன 8 ஆம் வகுப்பு மாணவிகள் மூவர் மீட்பு.
தமிழகம் - கரூர் மாவட்டம் தான்தோணிமலை பகுதியில் உள்ள அரசுப் பாடசாலையில் 8-ம் வகுப்பில் படிக்கும் மாணவிகளில் மூன்று மாணவிகள், கடந்த 4ம் திகதி வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
முக்கிய பொது இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிரிவி கமெராக்களை,பொலிஸார் ஆய்வு செய்தனர்.
இதில், 3 சிறுமிகளும் காட்பாடி ரயில்வே நிலையத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அதனை அடுத்து காணாமல் போன 3 சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.
அவர்களை பொலிஸார் விசாரித்த போது, கொரியாவில் பிரபல பி.டி.எஸ் (BTS) இசைக்குழு மீதான ஆர்வத்தால், அவர்களது இசைக்கச்சேரியை பார்ப்பதற்காக கொரியா செல்ல முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
BTS இசைக்குழு மீதான ஆர்வத்தால் கொரியா செல்லும் முயற்சியில் ஈடுப்பட்டு காணாமல் போன 8 ஆம் வகுப்பு மாணவிகள் மூவர் மீட்பு.
Reviewed by Madawala News
on
January 08, 2024
Rating: