சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது ; பேக்கரி சங்கம்



சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.



நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகளில் 25 சதவீதமானோரே சமையல் எரிவாயு மூலம் பேக்கரி உற்பத்திகளை மேற்கொள்கின்றனர்.


இதன்காரணமாக, பேக்கரி உணவு உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க எடுக்கமுடியாது. அதேநேரம், சமையல் எரிவாயு விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில் விலைத்திருத்தங்களை தமது சங்கம் மேற்கொள்விலை என அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது ; பேக்கரி சங்கம் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது  ; பேக்கரி சங்கம் Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5

1 comment:

  1. முதுகெழும்பு இல்லாத அரசாங்கம் இருப்பதனால் இந்த வீணாப் போன போக்கிரி பேக்கரிகாரன்கள், தான் நினைத்ததைச் செய்ய திட்டமிட்டிருக்கின்றார்கள். தேனீர் கடையில் தேனீர் கோப்பை ஒன்றை 30 ரூபாவுக்கு வழங்க சட்டம் பாஸ்பண்ணுமாறு அசேல சம்பத் என்ற தேனீர்கடை சங்கத் தலைவர் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறுகின்றார். முதுகெழும்பில்லாத கழுதைக்கு கால் சோம்பிப் போன கழுதை ஆலோசனை சொல்ல சைத்தானுக்கு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய தெரிவு செய்ய வாக்களித்து எருமைமாட்டுக் கூட்டம் சோர்ந்து கிடக்க இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு நாங்கள் தான் அடுத்த தேர்தலிலும் வெற்றியாளர்கள் என மஹிந்த கொள்ளைக்கூட்டம் இறுமாப்பு பேசுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.