கண்டியில் வட்ஸ் அப் மூலம் சிறுமியை மயக்கி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் பதிவு - சந்தேக நபர் தலைமறைவு



கண்டியில் வட்ஸ் அப் மூலம் ஏற்பட்ட நட்பினால் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தேடப்பட்டு வருவதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கும். அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வட்ஸ் அப் மூலம் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.


சிறிது காலம் மேற்படி வட்ஸ் அப் காதல் நீடித்துள்ள நிலையில், அண்மையில் குறித்த சிறுமியை நேரடியாக சந்திக்க வந்த அம்பலாந்தோட்டை நபர் சிறுமியை ஏமாற்றி கண்டி கெட்டம்பே பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று அங்கு சிறுமியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உற்படுத்திய பின்னர் அந்நபர் தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைளக்காக கண்டி தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தள்ள கண்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தம் பிள்ளைகள் மொபைல் தொலைபேசி பாவிப்பது தொடர்பில் பெற்றோர் மிக அவதானமாக செயல்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கண்டியில் வட்ஸ் அப் மூலம் சிறுமியை மயக்கி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் பதிவு - சந்தேக நபர் தலைமறைவு கண்டியில் வட்ஸ் அப் மூலம் சிறுமியை மயக்கி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் பதிவு - சந்தேக நபர் தலைமறைவு Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.