இன்றைய வானிலை அறிக்கை...



 ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு  மற்றும் ஹம்பாந்தோட்டை  மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும்  நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய  வாய்ப்புக் காணப்படுகின்றது.  


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


கடல் பிராந்தியங்களில் 

****************************


புத்தளம் தொடக்கம் கொழும்பு,காலி, பொத்துவில்  ஊடாக மட்டக்களப்பு  வரையான கடல் பிராந்தியங்களின் பல  இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.  


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து தென் கிழக்குத் திசையை நோக்கி காற்று வீசும். 


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 

இன்றைய வானிலை அறிக்கை... இன்றைய வானிலை அறிக்கை... Reviewed by Madawala News on March 15, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.