பசு மாட்டுக்கு பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்த குற்றத்தில் இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். #இலங்கை
கம்பஹா, வீரகுள, இஹல வீடியவத்த காணியில் கட்டப்பட்டிருந்த பசு மாட்டுக்கு பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 19 வயது இளைஞன் வீரகுள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கம்பஹா பதில் நீதவான் மகேஷ் ஹேரத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சம்பவத்தை நேரில் பார்த்த காணி உரிமையாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
சந்தேக நபரை ராகம போதனா வைத்தியசாலையில் உள்ள மனநல மருத்துவரிடம் ஒப்படைத்து மருத்துவ அறிக்கையுடன் ஜனவரி 23 ஆம் திகதி ஆஜர்படுத்துமாறு மஹர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
பசு மாட்டுக்கு பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்த குற்றத்தில் இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். #இலங்கை
Reviewed by Madawala News
on
January 16, 2023
Rating: