(அஷ்ரப் ஏ சமத்)
கட்டாா் நாட்டின் தேசிய தினம் புதன் கிழமை 14.டிசம்பா் 2022 ஆம் திகதி கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் இலங்கைக்கான துாதுவா் ஜெஸ்மின் பின் ஜபீர் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுற்றாடல்துறை அமைச்சா் ஹாபீஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டாா். அத்துடன் நினைவுதின கேக்கினை அதிதிகளாகக் கலந்து கொண்டா சபாநாயகா்,மகிந்த யாப்பா அபேரத்தின, நீதியமைச்சா் விஜயதாச ராஜபக்ச, அமைச்சா் டக்லஸ் தேவநாந்தா, வெளிநாட்டு அமைச்சா் அலி சப்றி விலையாட்டுத்துறை அமைச்சா் மற்றும் பாராளுமன்ற உறுப்பிணாகள் வெளிநாட்டுத் துவா்களும் கலந்து சிறப்பித்தனா்.. இரு நாடுகளது தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டன.
அத்துடன் கட்டாா் நாட்டில் நடைபெறுகின்ற உலக கால்பந்தாட்டப் போட்டிக்கான டீ.சேட் கைப்பைகளும் பரிசாக அதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் விமர்சையாக கொண்டாடப் பட்ட கத்தார் நாட்டின் தேசிய தினம்.
Reviewed by Madawala News
on
December 15, 2022
Rating: