பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
யானை தாக்கி மரணமடைந்தவரை அடையாளம் காண உதவுங்கள்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனாணைப் பிரதேசத்தில் கடந்த 07.12.2022ம் திகதி இரவு யானை தாக்கி மரணமடைந்த வயோதிபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் தற்போது வரை வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அடையாளங் காணப்படவில்லை.
இவர் பற்றிய ஆவணங்களோ தகவல்களோ இல்லாத நிலையில் இவரது வலது கையில் நடுவிரல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களையோ அல்லது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலக்கங்களையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு :
0777176652
0779915841
0777933733
--
யானை தாக்கி மரணமடைந்தவரை அடையாளம் காண உதவுங்கள்
Reviewed by Madawala News
on
December 15, 2022
Rating: