ரஞ்சித் ராஜபக்ஸ
தீபாவளி பண்டிகையொட்டி தமது கைவரிசைக் காட்ட வருகைத் தந்த ஐந்து பெண்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளி பொருள் கொள்வனவுக்காக ஹட்டன் நகருக்கு வருகைத் தருபவர்களின் பணம், நகைகள், உள்ளிட்டவைகளை கொள்ளையடிப்பதற்காக சந்தேகநபர்கள் ஐவரும் ஹட்டன் நகருக்கு வருகைத் தந்துள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
18- 30 வயதுக்குட்பட்ட குறித்த ஐந்து பெண்களும் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் பத்திக் குச்சிகள் விற்பனை செய்யும் போர்வையில் ஹட்டன் நகருக்கு வருகைத் தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைவரிசைக் காட்ட வருகைத் தந்த ஐந்து பெண்கள் பொலிஸாரால் கைது.
Reviewed by Madawala News
on
October 17, 2022
Rating: