முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரம் அதிகரிக்கப்படும்
என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு தமது போக்குவரத்து தேவைகளுக்கு 5 லீற்றர் எரிபொருள் போதாது என ஓட்டோசாரதிகள் மின்சக்தி அமைச்சரிடம் கையளித்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்காலத்தில் எரிபொருள் விலைச்சூத்திரம் தொடர்பில் ஆராயப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர், தற்போது இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளதாகவும், அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க உள்ளோம் ; எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர
Reviewed by Madawala News
on
October 17, 2022
Rating: