தம்பதியினர் பயணித்த கார் மீது ரயில் மோதியதில் பெண் படுகாயம்.



நுகேகொட பிரதேசத்தில் கார் ஒன்று ரயிலில் மோதியதில் பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.


நுகேகொட பங்கிரிவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பெங்கிரிவத்த புகையிரத நிலையத்திற்கு அருகில் வசிக்கும் தம்பதியினர் இன்று (21) அதிகாலை திம்புலாகல பகுதிக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணும் அவரது கணவரும் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி, வீட்டை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.


அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் நுகேகொட பங்கிரிவத்தை புகையிரத கடவையில் தம்பதியினர் பயணித்த கார் மோதியுள்ளது.

புகையிரதத்துடன் மோதிய கார் சில மீட்டர்கள் முன்னோக்கிச் சென்று பெங்கிரிவத்த புகையிரத நிலையத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் கார், இரண்டு தொலைபேசி கம்பங்கள் மற்றும் புகையிரதத்தின் மின் விளக்கு ஒன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தம்பதியினர் பயணித்த கார் மீது ரயில் மோதியதில் பெண் படுகாயம். தம்பதியினர் பயணித்த கார் மீது ரயில் மோதியதில் பெண் படுகாயம். Reviewed by Madawala News on September 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.