நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இயந்திரம் செயலிழப்பு... மின்வெட்டு காலம் நீடிக்கப்படலாம் என அறிவிப்பு.
கோளாறு காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் செயலிழந்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 03 ஆவது மின் உற்பத்தி இயந்திரமே இவ்வாறு செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மின்வெட்டு காலம் நீடிக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, மின்வெட்டு காலத்தை நீடிப்பது தொடர்பான அறிவிப்பு எதிர்காலத்தில் வெளியிடப்பட உள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இயந்திரம் செயலிழப்பு... மின்வெட்டு காலம் நீடிக்கப்படலாம் என அறிவிப்பு.
Reviewed by Madawala News
on
September 27, 2022
Rating: