ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹரான் ஹாசிமின் சாரதி உட்பட நால்வர் பிணையில் விடுதலை



ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹரான் ஹாசிமின் சாரதி உட்பட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


அவர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்போது சந்தேகநபர்களை தலா 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.


அத்தோடு, அவர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு – வவுனாதீவு பொலிஸ் நிலையத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


இந்த சம்பவம் தொடர்பாக சஹாரானின் சாரதி கஃபூர் மாமா, ஹம்ஸா மொஹிதீன் உட்பட நால்வர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹரான் ஹாசிமின் சாரதி உட்பட நால்வர் பிணையில் விடுதலை ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹரான் ஹாசிமின் சாரதி உட்பட நால்வர் பிணையில் விடுதலை Reviewed by Madawala News on September 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.