கைதான நபர் ஒருவரிடம் இருந்து 125 மொபைல், 10 மடிக்கணினிகள், 520 கைக்கடிகாரங்கள், கைக்குண்டு உட்பட பொருட்கள் மீட்பு
கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய ஒருவர்
தெமட்டகொடை பகுதியில் நேற்று(17) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 125 கையடக்கத் தொலைபேசிகள் பாகங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனைத்தவிர 10 மடிக்கணினிகள், 520 கைக்கடிகாரங்கள், 3 தொலைக்காட்சிகள், 1 பியானோ, 1 கிட்டார் மற்றும் கைக்குண்டு ஆகியன சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
கைதான நபர் ஒருவரிடம் இருந்து 125 மொபைல், 10 மடிக்கணினிகள், 520 கைக்கடிகாரங்கள், கைக்குண்டு உட்பட பொருட்கள் மீட்பு
Reviewed by Madawala News
on
September 18, 2022
Rating: