Update 12:50 PM
தற்போது காலிமுகத்திடல் பகுதியில் பலத்த
பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் காலிமுகத்திடல் பகுதிக்குள் நுழைவதற்கு முற்பட்டு வருகின்றனர். ஆனால் காலிமுத்திடல் பகுதியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, காலிமுகத்திடல் பகுதியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதோடு, ஒரு பதற்றமான சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
Earlier
கொழும்பு-கொள்ளுபிட்டியில் உள்ள அலரி மாளிகை வளாகத்தில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களுக்கும், அரசுக்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவத்தினால் குறித்த பகுதியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளாத அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
LIVE VIDEO : காலிமுகத்திடல் பகுதிக்குள்ளும் அரச ஆதரவாளர்கள் நுழைந்தனர்.
Reviewed by Madawala News
on
May 09, 2022
Rating: