கொழும்பு வந்து, அம்பானைக்கு அடி வாங்கி பேரா வாவியில் குளித்த நபர் வீடு திரும்பிய போது மனைவி எஸ்கேப்... மைனா குஞ்சி சோகங்கள்.
சில நாட்களுக்கு முன் கோல்பேஸ் திடலில் அமைதி ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்த பொது மக்களை
தாக்குவதற்கு வருகை தந்த நபர் ஒருவருக்கு ஏற்பட்ட துரதிஷ்ட சம்பவம் பற்றி சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் தென் மாகாணத்தை அண்மித்த கிராமமொன்றில் இருந்து சிலருடன் இணைந்து, ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்த பொது மக்களை தாக்குவதற்கு கொழும்புக்கு வந்திருந்தார்.
அன்றையதினம் யாரும் எதிர்பார்க்காத மாதிரி சம்பவங்கள் தலைகீழா மாறியதால் பொதுமக்களை தாக்க வந்தவர்கள் ஒட்டுமொத்தமாக பல இடங்களில் நையப்புடைக்கபட்டு ஓட நேர்ந்தது நாடே அறிந்தது.
அது போல் குறிப்பிட்ட தென் மாகாணத்தை நபரும் கொழும்பில் வைத்து பொதுமக்களால் பிடிக்கபட்டு நையப்புடைக்கபட்டு பேரா வாவியில் வீசப்பட்டு உள்ளே இருக்கவும் முடியாமல் ,வெளியே வந்தால் மீண்டும் அடி வாங்க வேண்டும் என்பதால் தலைமறைவாக ஒளிந்து திரிந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு ஒருவாறு ஊருக்கு திரும்பி உள்ளார்.
இவர் கொழும்பு சென்றது , அம்பானக்கி அடிவாங்கியது , பேரா வாவியில் சோப்பு, ஷாம்பு போடாமல் குளித்தது எல்லாம் ஏற்கனவே வீட்டில் மற்றும் ஊரில் உள்ளவர்களுக்கு தெரிந்து இருந்த அதேவேளை, வீட்டுக்கு சென்ற உடன் தான் இவருக்கு தெரிய வந்தது வீட்டில் இருந்த மனைவியை காணவில்லை என்று...
' கொழும்புக்கு போகும்போது இங்க இருந்த என் பொண்டாட்டி எங்கடா என்று தேடியததில் மனைவி வேறொரு நபருடன் ஏற்கனவே நான்கு நாட்களுக்கு முன் ஊரை விட்டே சென்று விட்டது தெரிய வந்துள்ளது.
மனைவி ஊரை விட்டு சென்றதை ஏன் எனக்கு அறிவிக்கவில்லை என்று ஊரில் இருந்த நெருங்கிய நண்பர்கள் , உறவினர்களிடம் கேட்டதற்கு ,
"நாங்கள் இதை தெரிவிக்க பல தடவை உனக்கு தொலைபேசி அழைப்பெடுத்தோம் ஆனால் நீ பேரா வாவியில் விழுந்து கிடந்ததால் உன் மொபைல் தொலைபேசி செயலிழந்து போய்விட்டது உனக்கு தெரியாதா ?
நீ வேண்டுமென்றால் உன் மனைவிக்கு அழைப்பெடுத்து பார் . '' நீங்கள் தொடர்பு கொண்ட நபர் வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்று பதில் வரும் என கூறி உள்ளனர்.