அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாடசாலையில்
இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய மாணவர் ஒருவர்
( பெயர் : Salvador Ramos ) எனவும், சந்தேகநபர் 19 மாணவர்களையும் 2 ஆசிரியரையும் சுட்டுக் கொலைசெய்துள்ளதாகவும் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
உள்ளூர் நேரப்படி ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தடுப்புக் காவலில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சான் அன்டோனியோவிற்கு மேற்கே சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உவால்டேவில் உள்ள ராப் எலிமெண்டரி பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்க பாடசாலை ஒன்றில் துப்பாக்கி சூடு.. 19 சிறுவர்கள் உள்பட 21 பேர் உயிரிழப்பு..
Reviewed by Madawala News
on
May 25, 2022
Rating: