எனது மனைவியை காலை நித்திரையிலிருந்து எழுப்பும் போது, அவர் உயிரிழந்திருந்தார் ; வாக்குமூலம் வழங்கிய கணவர் கைது.



மஸ்கெலியா, கங்கேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில், அவரது கணவர், மஸ்கெலியா  பொலிஸாரால் நேற்றுமுன்தினம் (19) கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதுடைய வசந்தமலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது மனைவியை நித்திரையிலிருந்து நேற்று முன்தினம் (19) காலை எழுப்பும் போது, அவர் உயிரிழந்திருந்ததாக அப்பெண்ணின் கணவரால், மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், குறித்த தம்பதியினர் இருவருக்கும் தொடர்ச்சியாக பிரச்சினைகள் காணப்பட்டதுடன், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அப்பெண், அவரது கணவரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் அயல்வாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், 18ஆம் திகதி இரவும் தம்பதிகள் இருவருக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டதாக அயல்வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனது மனைவியை காலை நித்திரையிலிருந்து எழுப்பும் போது, அவர் உயிரிழந்திருந்தார் ; வாக்குமூலம் வழங்கிய கணவர் கைது. எனது மனைவியை காலை  நித்திரையிலிருந்து  எழுப்பும் போது, அவர் உயிரிழந்திருந்தார் ;  வாக்குமூலம் வழங்கிய கணவர் கைது. Reviewed by Madawala News on January 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.