சி.எல்.சிசில்
இலங்கையில் கொவிட் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ‘அருண’ இணையத்தளத்துக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குறித்த நபர் நைஜீரியாவுக்கு விஜயம் செய்து இலங்கை திரும்பியுள்ளதாகவும் தொற்றுக்குள்ளான நபரின் முதலாம் மற்றும் இரண்டாம் தொடர்பாளர்களுக்கு மேற்கொள்ளக்கூடிய சுகாதார நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட் டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மக்கள் அனாவசியமாக அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளருடம் தொடர்பட்டவர்கள் அடையாளம்;
Reviewed by True Nation
on
December 03, 2021
Rating: