ஆசிரியர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்ககிவிட்டு
சிறுமியும், சிறுவனும் தப்பியோடிய சம்பவமொன்று போத்தல-காசிதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியரின் வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்ற 16 வயதுடைய சிறுமியும், சிறுவனொருவனும் நேற்று (21) இரவு ஆசிரியரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக போத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தேகம புனித அந்தோனியார் கல்லூரியில் கடமையாற்றும் 45 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு காயங்களுடன் பத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
காயமடைந்த ஆசிரியர், மேற்படி சிறுமியின் தாயாருடன் தகாத உறவினை பேணிவந்துள்ளதாகவும், இது தொடர்பில் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று வினவியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் குறித்த சிறுமி ஆசிரியரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் போத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு சிறுமியும், சிறுவனும் தப்பியோட்டம். #இலங்கை
Reviewed by Madawala News
on
November 22, 2021
Rating: