கந்தளாய் யூசுப்
மூன்றாம் கட்டமாக இருபது இருபத்தொன்பது வயது மேற்பட்டோருக்கு
சைனோபாம் தடுப்பூசிகள் இன்று ஆரம்பம் .
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவுக்கு பகுதியில் கொரோனா தடுப்பூசியின் இருபது இருபத்தொன்பது வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்றிலிருந்து (19) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கந்தளாய் சுகாதார வைத்திய சாலை மற்றும் அல் தாரிக் மகா வித்தியாலயத்திலும் இன்று (29) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
மூன்றாம் கட்டம் கொரோனா தடுப்பூசிகள் இன்றிலிருந்து நான்கு தினங்களுக்கு செலுத்தப்பட உள்ளதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இம்மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா,மூதூர் மற்றும் திருகோணமலை போன்ற ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 20- 29 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது
மூன்றாம் கட்டமாக, 20- 29 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி..
Reviewed by Madawala News
on
September 19, 2021
Rating: