பயணத்தடை கடுமையான நிபந்தனைகளுட னேயே நீக்கப்பட வேண்டுமென
பொதுச் சுகா தார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கூறுகையில்,
கோவிட் பெருந்தொற்றை கட்டுப்ப டுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நகைப்பிற்குரியதாகியுள்ளது.
பயணத்தடை அமுலில் ஏற்பட்டுள்ள தோல்விக்கு அதிகாரிகள் பொறுப்பு சொல்ல வேண்டும். பல்வேறு சுற்று நிரூபங்கள் மூலம் பல்வேறு தரப்பினரும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ம் திகதி பயணத்தடை நீ க்கப்பட்டாலும் கடுமையான சுகாதார விதி முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
இந்த பயணத் தடை மற்றும் முடக்க முறைமை பயனற்றதாக மாறியுள்ளது. அது தோல்விய டைந்து வருகிறது.
பொது மக்களை மட்டும் குறை சொல்ல முடியாது, பயணத்தடைமுறையில் பல்வேறு ஓட்டைகள் கள் காணப்படுகின் றன.
அதனையே மக்கள் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்த பயணத்தடை.
Reviewed by Madawala News
on
June 17, 2021
Rating: