கடலுக்குள் பேருந்துகளை மட்டுமல்ல இனிமேல் ரயில்களையும் இறக்குவேன்.



கடலில் காவியம் படைப் போம் என்று ஒவியம் தீட்டி உசுப்பேற்றி எமது மக்களுக்கு காடாத்தி செய்தவர்கள்தான், பேருந்துகளைகடலில் போட்டு கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கதினை அதிக ரிக்கும் செயற்பாடுகள் தொடர் பாக ஊழையிடுகின்றனர் என் றும் அவர் கூறினார்.

கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பாவனைக்கு உதவாத பேரூந்து களையும் புகையிரதப் பெட்டி களையும் கடலில் போடுகின்ற செயற்றிடம் தொடர்பில் சிலரி னால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் தொடர்பாக கேட் கப்பட்ட போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்கண்ட வாறு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர்மேலும் தெரிவிக்கையில்,

*கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதி கரிப்பதற்கு ஏதுவான கடல் நீரடி பாறைகளுக்கு ஒத்த பொறி
முறையை செயற்கையாக உரு வாக்கும் நோக்குடன், பாவ னைக்கு உதவாத புகையிரதப் பெட்டிகள், பேரூந்துகள், கப் பல்கள் மற்றும் கொங்கிறீற் துண்டங்கள் போன்றவற்றை கடலின் அடியில் போடுகின்ற செயற்பாடு சுமார் 40 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் நீண்டகாலமாகப் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.

17 ஆம் நூற்றாண்டில் இருந்து அமெரிக்காவில் இந்த முறையை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜப்பான் போன்ற நாடுகளில் கடந்த 150 வருடங் களாக இந்தப் பொறிமறையில் ஆர்வம் செலுத்தப்பட்டு வரு வதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

அதைவிட, இந்தியாவின் தமி ழகத்தின் பல்வேறு பகுகளிலும் கடந்த பல ஆண்டுளாக இவ்வா றான செயற்கை இனப்பெருக்க பொறிமுறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறன்றது.

குறிப்பாக, 2017 ஆண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியேறிய கப்பல் ஒன்று எண்ணெய் ராங்கருடன் மோதியமையினால் ஏற்பட்ட எண்ணெய் பரவல் காரண மாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. இதனால் கடல் வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்த விரைவாக மீள்வதற்கு செயற்கையான கடல் நீரடிப் பாறைகளை உருவாக்கும் இதே பொறிமுறைதான் முன்மொழி யப்பட்டிருந்தது. அதுமாத்திர மன்றி, பாவனைக்கு உதவாத பேரூந்துகளை கடலில் இறக் கும் வேலைத்திட்டத்தினை எமது அரசாங்கம் ஏற்கனவே, தென்னிலங்கையில் நடைமு றைப்படுத்தியுள்ளது. அதற்கு தென்னிலங்கையில் நல்ல வர வேற்பும் கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, வடக்கு கடல் பிரதேசத்தில் அத் துமீறி மேற்கொள்ளப்பட்ட தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளினாலும் ஏனைய சில காரணங்களினாலும் கடல்வளம் குறைவடைந்து வருவதாகவும் கடல் நீரடிப் பாறைகள் சேதப்ப டுத்தப்பட்டுள்ளதாகவும் எமது கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியாக எனது கவனத் திற்கு கொண்டு வரப்பட்டிருந்

இதனை விஞ்ஞான ரீதியான ஆய்வறிக்கைகளும் உறுதிப்ப டுத்தியிருந்தன.

இந்நிலையிலேயே, தேவை யான ஆய்வுகள் மூலம் பொருத் தமான இடங்கள் தெரிவு செய்து, குறித்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

ஆனால், சிலர் சுயநலன்க ளுக்காவும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்தச் செயற்றிட்டம் தொடர்பாகவும், கடந்த காலங்களைப் போன்றே தமிழ் மக்களை தவறாக வழி நடத்தி வருகின்றனர்' என்று தெரிவித்தார்.
கடலுக்குள் பேருந்துகளை மட்டுமல்ல இனிமேல் ரயில்களையும் இறக்குவேன். கடலுக்குள் பேருந்துகளை மட்டுமல்ல இனிமேல் ரயில்களையும் இறக்குவேன். Reviewed by Madawala News on June 17, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.