போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டு முழுமையான ஊரடங்கினை நடைமுறைப்படுத்துவது
குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.முழுமையான ஊரடங்கினை பிறப்பிக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கவில்லை கொவிட் தொடர்பான செயலணி இது குறித்து ஆராயவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் அவ்வாறான முடிவை எடுக்கவேண்டிய அவசியமில்லை ஆனால் அவ்வாறான தேவையேற்பட்டால் அதிகாரிகள் அது குறித்து ஆராய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எடுக்கும் எந்த முடிவு குறித்தும் அரசாங்க தகவல் திணைக்களமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களோ தகவல் வழங்கும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
முழுமையான ஊரடங்கு குறித்து அரசாங்கம் ஆராயவுமில்லை- தீர்மானிக்கவுமில்லை – இராணுவதளபதி திட்டவட்டம்
Reviewed by Madawala News
on
June 08, 2021
Rating: