சதொச வர்த்தக நிலையத்தினுள் நுழைந்து விற்பனையாளர்களை மிரட்டி மதுபான போத்தல்களை கொள்ளையிட்டுச் சென்றவர்களை பிடிக்க விசாரணை.
அனுராதபுரத்தின் சதொச பல்பொருள் அங்காடியின் மதுபான
விற்பனை பிரிவிலிருந்து இனந்தெரியாத நபர்கள் மதுபான போத்தல்களை எடுத்துச்சென்றுள்ளனர்.
குறித்த சதொச அங்காடிக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்த விற்பனையாளர்களை மிரட்டி ஒரு தொகை மதுபான போத்தல்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சதொச வர்த்தக நிலையத்தினுள் நுழைந்து விற்பனையாளர்களை மிரட்டி மதுபான போத்தல்களை கொள்ளையிட்டுச் சென்றவர்களை பிடிக்க விசாரணை.
Reviewed by Madawala News
on
June 09, 2021
Rating: