சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைகைக்கு 780 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கிறது.



சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 780 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சந்திரநாத் அமரசேகர தெரிவித்துள்ளார்.


அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்த நிதி இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இது ஒரு கடன் தொகை அல்ல எனவும் குறித்த உறுப்புரிமைக்காக நாட்டுக்குக் கிடைக்கப் பெற வேண்டிய தொகையாகும் எனவும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சந்திரநாத் அமரசேகர தெரிவித்துள்ளார்.


அத்துடன், எதிர்வரும் ஒகஸ்ட் -செப்டம்பர் மாதங்களில் இந்த தொகை இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனொன்றைப் பெறுவதற்கு அரசாங்கம் எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைகைக்கு 780 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைகைக்கு 780 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கிறது. Reviewed by Madawala News on June 15, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.