சில பிரதேசங்களில் மழை... சில மாவட்டங்களில் அதிகரித்த வெப்பநிலை.



 சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களின்  சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும்     

  நுவரேலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும்.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். 


சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில்  தொடங்கொட, இத்தகொட, அகலவத்தை, அத்வெல்தோட்ட, றன்வெல, கொடவெலிபொகுனுகல மற்றும் குமன போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன்  உச்சம் கொடுக்கின்றது. 


முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலநறுவை, திருகோணமலை, மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.


மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். 



கடல் பிராந்தியங்களில் 

***************************

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். 


காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான அத்துடன் புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  45 km இலும் கூடிய வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும். 


காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான அத்துடன்  புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.


தேசமானிய 

மொஹமட் சாலிஹீன் 

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 


சில பிரதேசங்களில் மழை... சில மாவட்டங்களில் அதிகரித்த வெப்பநிலை. சில பிரதேசங்களில் மழை... சில மாவட்டங்களில் அதிகரித்த வெப்பநிலை. Reviewed by Madawala News on April 06, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.