புகையிரததுடன், இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மோதி விபத்து... அருகில் இருந்த லொத்தர் சீட்டிழுப்பு கடையில் இருவர் காயம்.



வனவாசல புகையிரத கடவையில் புகையிரதம் ஒன்றுடன் இராணுவ
 வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது, விபத்து இடம்பெற்ற இடத்தில் லொத்தர் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும், அவரிடம் லொத்தர் கொள்வனவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவருமே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பேருந்தில் பயணித்த எந்தவொரு நபருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்காவலையில் இருந்து கொழும்பு-கோட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரத்துடன் வத்தளையில் இருந்து தொரண வீதிக்கு சென்றுக்கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புகையிரததுடன், இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மோதி விபத்து... அருகில் இருந்த லொத்தர் சீட்டிழுப்பு கடையில் இருவர் காயம். புகையிரததுடன், இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து  மோதி விபத்து... அருகில் இருந்த லொத்தர்  சீட்டிழுப்பு கடையில் இருவர் காயம். Reviewed by Madawala News on March 01, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.