இங்கிலாந்து கிரிக்கெட்அணி வீரர்கள் தங்கியுள்ள காலி ஹோட்டலின் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
காலி, டடெல்ல பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலின் இரண்டு பணியாளர்களுக்கு
கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் இன்று(15) உறுதிப்படுத்தியுள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட்போட்டிகளின் போது இங்கிலாந்து கிரிக்கெட்அணி வீரர்கள் இந்த ஹோட்டலில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹோட்டலின் சமையலறையில் பணிபுரியும் குறித்த இரு பணியாளர்களும் ரத்கம, வெலிகமவைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்று இவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட்அணி வீரர்கள் தங்கியுள்ள காலி ஹோட்டலின் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
Reviewed by Madawala News
on
January 15, 2021
Rating: