போதைப்பொருள் வர்த்தகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனுராதபுர குற்ற விசாரணை பிரிவின்
பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அனுராதபுர தலைமையக பொலிஸ் பரிசோதகரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று (18) காலை 11.15 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
43 வயதுடைய குறித்த பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 5 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொலிஸ் பரிசோதகரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் கைது.
Reviewed by Madawala News
on
January 18, 2021
Rating: