தம்மிக்க கொரோனா பாணியை 10,000 ரூபாவுக்கு வாங்கி பருகியும், பிரதேச சபை உறுப்பினர் உற்பட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று.
தம்மிக்க பாணியை பருகியும் பிரதேச சபை உறுப்பினர் உற்பட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும்
கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கேகாலையின் பிரதேச சபை இலங்கை மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஷிலந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் எம்பிலிப்பிட்டியவிலுள்ள இளைஞர் படை மையத்திலிருந்து எங்கள் செய்தி குழுவுடன் உரையாடிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிராக தம்மிகா பண்டாராவினால் தயாரிக்கப்பட்ட பாணியை குறித்து கேகாலையைச் சேர்ந்த மற்றுமொரு தொழிலதிபர் எங்கள் செய்தி குழுவிடம் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
குறித்த பாணி போத்தலை 10,000 ரூபாவுக்கு வாங்கி பருகியிருந்தாலும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
தம்மிக்க கொரோனா பாணியை 10,000 ரூபாவுக்கு வாங்கி பருகியும், பிரதேச சபை உறுப்பினர் உற்பட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று.
Reviewed by Madawala News
on
January 18, 2021
Rating: