அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் தாழ் நிலப்பிரதேசங்கள் பலவும் வெள்ளத்தில்...



ஏ.பி.எம்.அஸ்ஹர் எம்.எம்.ஜெஸ்மின்
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் தற்போது

பெய்து வரும் பலத்த மழையினால் தாழ் நிலப்பிரதேசங்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் நேற்று ம சனிக்கிழமையிலிருந்து மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ள
துடன் இன்றும் மழை இடை விடாது பெய்து வருவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீதிகள் , வீடுகள், வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழக்கையும் பாதிக்கப்பட்டு பல வேறு பட்ட அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

அம்பாறை மாவட்ட,த்தில் கல்முனை சம்மாந்துறை நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், இறக்காமம் போன்ற பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது இதேவேளை இப்பிரதேசங்களிலுள்ள குளங்களின் நீர் மட்டமும் உயர்வடைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் தாழ் நிலப்பிரதேசங்கள் பலவும் வெள்ளத்தில்... அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் தற்போது   பெய்து வரும் பலத்த மழையினால் தாழ் நிலப்பிரதேசங்கள் பலவும் வெள்ளத்தில்... Reviewed by Madawala News on January 10, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.