இன்றைய வானிலை அறிக்கை விபரம்..



 கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் .


சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். 


     **** கடல் பிராந்தியங்களில் ****


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் .


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30-40 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்துவீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.


இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையிலும் காணப்படும். 


தேசமானிய 

மொஹமட் சாலிஹீன் 

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 

இன்றைய வானிலை அறிக்கை விபரம்.. இன்றைய வானிலை அறிக்கை விபரம்.. Reviewed by Madawala News on January 22, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.