சுகாதார அமைச்சின் பத்து ஊழியர்கள் கொரோனாவினால்
பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட பணியாளர்களுடன் நேரடி தொடர்பிலிருந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ளனர் என சில நாட்களிற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட பணியாளர்கள் வீடு திரும்பிய பின்னர் நாடு தமது பணிகளிற்கு திரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் பிரிவு இது குறித்து சுகாதார அமைச்சக அதிகாரிகளிற்கு அறிவித்தது அதன் பின்னர் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் உடனடியாக துரித அன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் இதன்போது ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானது இதன் பின்னர் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் கண்டு சோதனைகளை மேற்கொண்ட வேளை மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் மேலும் 10 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று.
Reviewed by Madawala News
on
January 21, 2021
Rating: