நாளை வெள்ளிக் கிழமை (27) மடவளை பஸார் பிரதேசத்தில்
உள்ள அனைத்து விற்பனை நிலையங்களும் மூடப் படவுள்ளது.
பாததும்பர பிரதேச செயலகம், பிரதேச வைத்திய அதிகாரிகள் மற்றும் மடவளை வர்த்தக சங்கம் இதனை முடிவெடுத்துள்ளது.
மடவளை நகரில் அமைந்திருக்கும் விற்பனை நிலையமொன்றில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இம்முடிவு எடுக்கப் பட்டது.
குறித்த விற்பனை நிலைய மற்ற ஊழியர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவின் பின்னரே மேலதிக முடிவுகள் எடுக்கப்படவுள்ளகாக வர்த்தக சங்க தலைவர் அல்ஹாஜ். W. M. நாஜீம் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை மடவளை மதீனா தேசிய பாடசாலையும் நாளை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
நாளை வெள்ளிக் கிழமை (27) மடவளை பஸார் பிரதேசத்தில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களும் மூடப்படுகிறது.
Reviewed by Madawala News
on
November 26, 2020
Rating: