ஜப்பானிய சிறுமியை அழைத்து வந்து திருமணம் செய்த இலங்கை இளைஞன் போலீசாரால் கைது.



 ஜப்பானிய சிறுமியை அழைத்து வந்து, இலங்கையில் அந்த பெண்ணை திருமணம் செய்த இலங்கை இளைஞர் ஒருவர் மாரவில, முடுகதுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட தம்பதியினர் இன்று நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த, அதே வேளை அந்த சிறுமி கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிறுமியைக் கடத்தியதாகக் கூறி அந்த பெண்ணின் தாய் இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை போலீசில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் இலங்கை அரசு அதிகாரிகளுக்கு அறிவித்தது.

காதல் விவகாரத்தில் சிறுமியின் தாயார் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து இருவரும் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக கொச்சிகடை போலீசார் தெரிவித்தனர்.

இலங்கை இளைஞன்
கல்வி கற்பதற்காக ஜப்பானுக்குச் சென்று ஜப்பானியப் பெண்ணுடன் தனது வீட்டில் பணிபுரிந்தபோது தம் மகளுடன் காதல் உறவு ஏற்பட்டதாக குறித்த சிறுமியின் தாயாரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஜப்பானிய சிறுமியை அழைத்து வந்து திருமணம் செய்த இலங்கை இளைஞன் போலீசாரால் கைது. ஜப்பானிய சிறுமியை  அழைத்து  வந்து திருமணம் செய்த இலங்கை இளைஞன் போலீசாரால் கைது.     Reviewed by Madawala News on November 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.