பாறுக் ஷிஹான்
கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி
முரளிதரன்
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று (13) உத்தியோகபூர்வமாக அலரிமாளிகையில் வைத்து தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 30000 அளவிலான வாக்குகளை
பெற்ற அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டிருந்தார்.
இதற்கமைய பிரதமர்
கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு இப்பதவியை வழங்கப்பட்டமை குறித்து அவரின் ஆதரவாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கின்றனர்.
பிரதமரின் அம்பாறை - மட்டக்களப்பு இணைப்பாளராக கருணா அம்மான் நியமனம்.
Reviewed by Madawala News
on
October 13, 2020
Rating: