நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் நிலைமையிலும், வைத்தியசாலைகளிலுள்ள
கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் கொரோனா தொற்றுள்ளானவர்களில் இதுவரை 186 பேர் பூரணமாக குமணடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதன்படி, இதுவரை மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் 2,508 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
மேலும், தம்மைத் தாம் பாதுகாத்து கொள்வது பொது மக்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தம்மைத் தாம் பாதுகாத்து கொள்வது பொது மக்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு .
Reviewed by Madawala News
on
October 22, 2020
Rating: