பேலியகொடை மீன் சந்தையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை
மேற்கொண்ட கொழும்பு நகநசபையின் பொது சுகாதாரப் பிரிவில் குறைந்தது ஒன்பது அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு நகநசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொழும்பில் ஒக்டோபர் 18 முதல் நேற்று வரை மொத்தம் 5,368 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவற்றில் 937 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 541 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில், கம்பாஹா மாவட்டத்தில் இருந்து 304 பேரும், கொழும்பிலிருந்து 191 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இருந்து 42 நோயாளிகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட 9 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று.
Reviewed by Madawala News
on
October 27, 2020
Rating: