இந்தியாவில் இருந்து டுபாய்க்கு இயக்கப்பட்ட ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு அந்நாட்டின்
சிவில் ஏவியேஷன் ஆணையம் தடை விதித்துள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளமையை அடுத்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு விதிகளின்படி இந்தியாவில் இருந்து பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளும், பயணத்திற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் பெற்றுக்கொண்ட பி.சி.ஆர் சோதனையின் நெகடிவ் சான்றிதழைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏயார் இந்தியா விமானங்களுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை விதித்தது .
Reviewed by Madawala News
on
September 18, 2020
Rating: