கிண்ணியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை- கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கந்தளாய் சூரியபுர விசேட பொலிஸ் அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் (25) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இவ்வாறு தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டவர் கிண்ணியா, ரஹ்மானியா பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இனிய பகுதியின் ஹெரோயின் போதைப்பொருள், ஐஸ் போதைப்பொருள் போன்றவற்றை விற்பனை செய்து வருவதாக விசேட அதிரடிப் படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர்களின் சோதனையிட்ட போது அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 4 கிரேம் 630 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டதாகவும் கைப்பற்றப்பட்ட சந்தேக நபரை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக உன் அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் எவ்வாறு கிண்ணியா பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றது என்பது பற்றிய இரகசிய தகவல்களை திரட்டி வருவதாகவும் இதனுடன் தொடர்புடைய முகவர்களை விசாரணை செய்து வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
Reviewed by Madawala News
on
September 26, 2020
Rating: