இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 96,551 பேருக்கு கொரோனா தொற்று. மொத்த எண்ணிக்கை 45.62 லட்சத்தை தாண்டியது; இதுவரை 76,271 பேர் பலி.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 96,551 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 45.62 லட்சத்தை தாண்டியது;
இதுவரை அங்கு 76,271 பேர் பலி ஆகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45.62 லட்சத்தை கடந்துள்ளது.
அதே போல், பலி எண்ணிக்கையும் 76 ஆயிரத்தை தாண்டியது.
நேற்று 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், அந்நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 96,551 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45,62,414 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,209 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 76,271 ஆக உயர்ந்தது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,43,480 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 77.65 ஆக குறைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் விகிதம் 1.67% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 96,551 பேருக்கு கொரோனா தொற்று. மொத்த எண்ணிக்கை 45.62 லட்சத்தை தாண்டியது; இதுவரை 76,271 பேர் பலி.
Reviewed by Madawala News
on
September 12, 2020
Rating: